Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

குளத்தூர் மகாத்மா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு

புதுக்கோட்டை

குளத்தூர் மகாத்மா மழலையர் பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை  குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா பரிசளிப்பு விழா  திருமண  மண்டபத்தில்  நடைபெற்றது. மகாத்மா பள்ளி தாளாளர்   ரவிசந்திரன்   தலைமை  வகித்தார். ஆலோசகர் தீபாராஜசேகர் முன்னிலை வகித்தார்
நிகழ்வில்,  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் தனசேகரன்  மழலையர் குழந்தைகளுக்கான பட்டம்    மற்றும்  பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு  விருதுகள், நற்சான்றிதழ்கள்   சுமார் 200 -க்கும் மேற்பட்டவர் களுக்கு வழங்கி பாராட்டி  பேசினார்.

புதுக்கோட்டை
மகாத்மா மழலையர் பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழா

நிகழ்வில்,   பட்டிமன்ற புகழ் மஹாசுந்தர்,   அபிராமி  பள்ளியின் ஆலோசகர்   அரசு சிறப்பு  வழக்கறிஞர் எம். செந்தில்குமார், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் வேலுசாமி, முன்னாள் தலைவர்  செந்தில்,     செயலாளர் பாலகிருஷ்ணன், கல்வியாளர்கள் , காசிநாதன்  கவிஞர் ஜனார்த்தனன்,   ஜேசி,  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு   பாராட்டு தெரிவித்து வாழ்த்திப் பேசினார்.

ஆசிரியைகள்   மாணவ, மாணவிகள், பெற்றோர்கள்   உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.  விழா  ஏற்பாடுகளை பள்ளி தாளாளர்  தலைமை ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர்.

முன்னதாக அனைவரையும் மழலையர்கள்   வாவேற்றனர். நிறைவாக ஆசிரியை ரம்யா நன்றி கூறினார் ஆசிரியை சுபத்திரைகேசகவள்ளி நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top