Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும்  மரபணு பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை

மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரத்தில்,  டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும், ஜூலை 5ஆம் தேதி புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரபணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், சந்தேகப்படும் படியாக உள்ளோரின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்க்க சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 11 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்திட சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்து நீதிமன்ற அனுமதியும் பெற்றனர். ஆனால், இதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுத்துச் சென்றனர். 8 பேர் ரத்தமாதிரி கொடுக்க வராமல், மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

அவர்களின் தரப்பை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட வழக்கின் விசாரணை நீதிமன்றம் அந்த 8 பேரின் கருத்தைக் கேட்டுப் பதிவு செய்து, மேல்நடவடிக்கை குறித்து உத்தரவிட லாம் என தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து ஜூலை 1 -ஆம் தேதி மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜரானார்கள். அப்போது  தங்களுக்கு மரபணு பரிசோதனை நடத்தக் கூடாது என மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி  ஜெயந்தி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல்  8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, ஜூன் 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகி 8 பேரும் மரபணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளைத் தர வேண்டும் என நீதிபதி  ஜெயந்தி உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top