Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு

தமிழினி துணைவன் மூலம் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தமிழினி புலன குழுவை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்,மூத்த மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் ஒன்றிணைந்து தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவிக ளுக்கு மருத்துவ கல்வியை சிரமமின்றி அவர்கள் படிப்பதற்கு கட்டணம் இல்லாமல் தமிழினி துணைவன் என்ற வாட்ஸ்அப் குழு கடந்த 2019 -ல்   உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழினி துணைவன் நிறுவனரும் அரசு மருத்துவருமான டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி கூறியதாவது:

தமிழ்நாடு

தமிழகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளுக்கு திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு முதலாமாண்டு மருத்துவ பாடத்தின் கருப்பொருளை பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள் கொண்டு தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

இதுவரை முதலாம் ஆண்டு மருத்துவ பாடங்களான உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியல் குறித்து இணையவழி வகுப்புகள் மூலம் தமிழில் விளக்கிக் கூறி தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரமொரு பிரபல மருத்துவ நிபுணர் கலந்து கொள்ளும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வகுப்பு, மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப் பட்டு அதிலும் மாணவ மாணவிகளுக்கு எழும் சந்தேகங்க ளுக்கு   தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழுவில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

நிகழ்   ஆண்டில்  தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2023 -2024 கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலா மாண்டு  மாணவர்களுக்கு வகுப்புகள் சிறந்த மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களால் வாட்ஸ் அப் குழு வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும்.

மாணவ மாணவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு (செப் 5) ஆசிரியர் தினத்தில் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் வாரந் தோறும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாலை 6 முதல் 7 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது.

பேராசிரியர்கள் ரூபாஸ்ரீ, செந்தில்குமார், திருமாறன், சூர்யா ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட உள்ள இந்தப் பயிற்சியில் மனநல ஆலோசனை வகுப்பும் நடத்தப்படுகிறது. சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன.

எனவே, பயிற்சியில் சேர விரும்புவோர் 78458 49867 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்  என்றார் தமிழினி துணைவன் குழுவின் இணைய நிறுவனர் டாக்டர். வீ.சி.சுபாஷ் காந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top