Close
செப்டம்பர் 20, 2024 6:39 காலை

கோபி ஒன்றியம் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு

பணிகளைமுன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

கோபி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாங்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட 2 இடங்களில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 24 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. மேலும் குடிநீர் தொட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டி என மொத்தம் 47 லட்சம் மதிப்பிலான பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தொடக்கி  வைத்தார்.

நிகழ்ச்சியில், யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஊராட்சித் தலைவி சாமியாத்தாள், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய செயலாளர் வேலுமணி, எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன், கவுன்சிலர் தென்னரசு, தன்னாசி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top