Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலுள்ள மணல் ராமச்சந்திரனின் நிஜாம் காலனி அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் மற்றும் கல் குவாரி தொழில் அதிபர் எஸ். ராமச்சந்திரன். இவரது வீடு முத்துப்பட்டினத்தில் உள்ளது. புதுக்கோட்டை நகரில் நிஜாம் காலனியில் அலுவலகம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியி லிருந்து  மணல், மண், கல் குவாரிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு புதுக்கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்துக்கு அமலாக்கத் துறை அலுவலர்கள் வந்தனர். சிறிது நேரத்தில் முத்துப்பட்டி னத்திலுள்ள அவரது வீட்டுக்கும் அமலாக்கத் துறையினர் சென்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியிலுள்ள பொறி யாளர் அலுவலகம், ஏஎம்ஏ. நகரிலுள்ள மணிவண்ணன் வீடு, மழவராயன்பட்டியிலுள்ள அவரது உறவினர் வீரப்பன் வீடு, கந்தர்வகோட்டை அருகேயுள்ள புனல்குளம் சண்முகம் என்பவரின் குவாரி ஆகிய இடங்களிலும் அமலாக்கத்  துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, மத்திய ஆயுதக் காவல் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top