Close
அக்டோபர் 5, 2024 9:59 மணி

திருமயம் எஸ்எல்எல். அறநிலையம் சார்பில் அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுக்கோட்டை

திருமயம் எஸ்எல்எஸ். அறநிலையம் சார்பில் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு ரொட்டிஹார்லிக்ஸ் வழங்கிய நிர்வாகி அக்பர்அலி

திருமயம் தொழிலதிபர் எஸ்எல்எஸ்.சையது இப்ராஹிமின் 24 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எஸ்எல்எஸ். அறநிலையம் சார்பில் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியுள்ள  நோயாளிகளுக்கு ரொட்டி, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் கிருபா சங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அறநிலைய நிர்வாகி எஸ். எல் .எஸ் அக்பர்அலி குடும்பத்தினர் கலந்து கொண்டு, 100 நோயாளிகளுக்கு, ரொட்டி, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்கினர்.  நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top