Close
அக்டோபர் 5, 2024 10:03 மணி

அக்னிவீா் திட்டம்: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்..!

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,

2024-2025 ஆம் ஆண்டுக்கான ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வித் தகுதி கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தோவு அலுவலா் (தலைமையிடம்), சென்னை என்ற அலுவலகத்தை 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top