கடந்த மாதம் சிபிஎஸ்இ வாரியம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் (NCB) இணைந்து புது தில்லி வசந்த் விஹாரில் உள்ள மாடர்ன் பள்ளியில் “No To Drug, Yes To Life” ஆம்” என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.
இந்த பிரசாரத்தை அனைத்து சிபிஎஸ்சியுடன் இணைந்த பள்ளிகளிலும் போதை மருந்து விழிப்புணர்வு திட்டங்களை விரிவுபடுத்த போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று சோளிங்கர் வித்யாபீடம் பள்ளியில் பயிலும் 9, 10, மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பேரணியை நடத்தினர்.
சோளிங்கர் கோயில் முன் இந்த பேரணியை தொடங்கி வைத்த பள்ளி தாளாளர் விஷ்வபாரதி, மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக கூறினார்.
பின்னர் பேரணியாக சென்ற மாணவர்கள், அரக்கோணம் சாலையில் உள்ள பாணாவரம் கூட் ரோட்டில் பேரணியை நிறைவு செய்தனர்.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தவசி மணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.