சிவபெருமானை நேரில் பார்த்த ஆங்கிலேயர் ஈசன் எப்படி இருந்தார் என அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்தார்.
பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை இங்கு பார்ப்போம். சிவன் எல்லோருக்காமான இறைவன் என்பதை இந்த ஆங்கிய தம்பதியர் மூலம் நாம் உணர முடியும். ஆங்கிலேய படை தளபதியை காக்க நேரில் தோன்றிய சிவ பெருமானை அவரே வர்ணித்து அனுப்பிய கடிதம், தற்போது பைஜிநாத் மஹாதேவ் கோயிலில் கல்வெட்டாக உள்ளது. அவர் ஈசனை வர்ணித்தைதையும், கோயில் உருவான விதமும் இங்கு பார்போம்.
இறைவன் எல்லைகளைக் கடந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், சரணடைந்தவருக்கு தன் காத்தருளுவான் என்பதை இந்த உண்மை சம்பவம் விவரிப்பதாக உள்ளது. யோக யாத்ரா என்ற புத்தகத்தில் இந்த அற்புத நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இருந்தனர் என்பது நமக்கு தெரியும். 1879ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரியாக இருந்த லெப்டினண்ட் கர்னல் சி மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தினார்.
கர்னல் மார்டின் குறிப்பிட்ட நாள் இடைவெளிக்கு ஒருமுறை தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதம் அனுப்புவது வழக்கம். ஆனால் போருக்கு சென்ற இடத்தில் மார்டினுக்கு சில சிக்கல்கள் நேரிட்டதால், அவரால் மனைவிக்கு கடிதம் அனுப்ப முடியவில்லை.
கடிதம் வராததால் மனம் நொந்த கர்னலின் மனைவி, ஒருநாள் குதிரையில் சவாரி சென்ற போது, அவரின் கண்ணில் பைஜிநாத் கோயில் தென்பட்டது. அந்த கோயிலிலிருந்து வந்த சங்கின் ஒலி, சிவ மந்திர ஒலிகள் அவரை ஈர்த்து கோயிலுக்குள் செல்ல தூண்டியது.
உள்ளே சென்ற அவர் அங்கு பூஜை செய்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டு, தன் துயரை அவர்களிடம் விளக்கினார். வேதியர்கள் உங்களின் துயர் துடைக்க சிவ பெருமானால் தான் முடியும். அவர் தன்னை அண்டியவர்களின் துயரை நீக்கி இன்பத்தை அளிக்கக் கூடியவர் எனக்கூறினர்.
கர்னல் மார்டினின் மனைவிக்கு ‘ஓம் நமச்சிவாய’ என்ற லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைக் கூறி, இதனை 11 நாட்கள் தொடர்ந்து உச்சரித்து பிரார்த்தனை செய்து வாருங்கள் உங்கள் துயரை சிவனண துடைப்பார் என்றனர்.
கர்னலின் மனைவி, தன் கணவன் எந்த துயரமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்து தருவதாக பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினார். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை அவர் 11 நாட்கள் பக்தியுடன் உச்சரித்தார். சரியாக பதினோராம் நாள் கர்னலிடமிருந்து கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், “போர்க்களத்தில் இருந்தாலும் தொடர்ச்சியாக உனக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் எங்களை எதிரிகள் நாளாப் புறமும் சூழ்ந்து கொண்டனர். நாங்கள் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டோம். உயிரி பிழைக்க எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத நிலையில், அங்கு நீண்ட சடையுடன் கூடிய ஒரு இந்திய துறவியைக் கண்டேன். அவர் கைகளில் மூன்று முனைகளுடன் கூடிய கூறிய ஆயுதம் வைத்திருந்தார்.
அவரின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் இருந்தது. அவர் வைத்திருந்த ஆயுதத்தை கையாண்ட விதம் பிரமிக்க வைத்தது. அவரின் பராக்கிரமத்தைப் பார்த்த எதிரிகள் பின் வாங்கி ஓடிவிட்டனர். தோல்வியை தழுவ வேண்டிய தருணத்தை அப்படியே மாற்றி நாங்கள் வெற்றியை பெற்றது அவரால் தான்.
இதற்கெல்லாம் புலித்தோலை அணிந்தவரும், கையில் மூன்று முனை கொண்ட கூறிய அவரின் ஆயுதமுமே காரணம். அவர் அங்கிருந்து செல்லும் போது, உன் மனைவி பிரார்த்தனை மூலமாக கேட்டுக் கொண்டதன் காரணமாக தான் காக்க வந்ததாக என்னிடம் கூறினார். தற்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை. விரைவில் திரும்புவேன்.” என எழுதியிருந்தார். இந்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த கணமே கர்னலின் மனைவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
பிரார்த்தனைக்கு இணங்க கணவரை சிவனே நேரில் சென்று காத்தருளியதால், அவரின் பாதங்களில் சரணடைந்தார். சில நாட்களில் கர்னல் மார்ட்டின் வீடு திரும்பிய பின்னர் நடந்த விஷயங்களை அவரது மனைவி கூற, இருவரும் சிவ பக்தர்களாக மாறினர்.
அவரின் வேண்டுதலில் படி 1883ல் கர்னல் மற்றும் அவரின் மனைவி ரூ. 16,000 ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடையாக அளித்தனர். இந்த குறிப்பு இன்றும் பைஜிநாத் ஆலயத்தில் கல்வெட்டுகளாக உள்ளன. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுவாகும்.