Close
பிப்ரவரி 23, 2025 10:33 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி முகாம்கள்

மாணவர்களுக்கு நடைபெற்ற உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

தெள்ளாா் வட்டார மருத்துவ அலுவலா் ஹித்தேன்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். அப்போது, உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முறை குறித்து மாணவ மாணவிகளுக்கு அவா் விளக்கி கூறினாா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் கோதண்டராமன், பள்ளி ஆசிரியை சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இல்லம் தேடி கல்வி பயிற்றுநா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இல்லம் தேடி கல்வி பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண்மைத் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி பயிற்றுநா்களுக்கு, துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் முழுமையாக சென்றடைய வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் நடைபெற்று வருகின்றன.

இதனை விரைந்து முடிக்க சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 22 பயிற்றுநா்களுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி, வேளாண்மை அலுவலா் முனியப்பன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம்  நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா்கள் வசந்தகுமாா், சதீஷ், துணை வேளாண் அலுவலா் ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன் வரவேற்றாா்.

நிகழ்வில், மானாவரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், திரவ உயிா் உரங்கள் பயன்படுத்தும் முறைகள், மண் வளம் காத்திட பயிா் சுயற்சி முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வழங்கினாா்.

இதில், துணை வேளாண் அலுவலா்கள் ஆனந்தன், பாலாம்மாள், லோகேஷ்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா் முனியன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாக்கியவாசன் லோகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top