Close
ஜூன் 6, 2025 3:43 மணி

கலைஞர் கனவு இல்லம் வீடு : நேரில் ஆய்வு..!

விழுப்புரம் மாவட்டம், பில்ராம்பட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான ஆணை பெற்றவர்களிடம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

விழுப்புரம் :

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பணி ஆணை வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் 02.06.2025 திங்கள்கிழமை அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பணி ஆணை வழங்கப்பட்டவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, குடியிருப்பு வீடுகள் விரைந்து கட்டுவது தொடர்பாக பயனாளிகளிடம் கேட்டறிந்ததோடு, கட்டுமானப்பணியினை விரைந்து தொடங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top