நாமக்கல் :
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்துள்ளாதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிள், பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கக் கூடாது.
இதனை மீறி யாராவது லஞ்ம் கேட்டால், அது குறித்து, நாமக்ல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளிக்கலாம். மேலும் தொலைபேசி எண். 04286 281331 மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகாரின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




