Close
மார்ச் 7, 2026 8:01 மணி

தென்காசியில் இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்..!

இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமணம். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமணம். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தென்காசி பகுதி சேர்ந்த வசந்த் மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதி சார்ந்த புஷ்பவள்ளி ஆகிய இருவருக்கும் இன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் பழனி நாடார் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரசால் வழங்கப்படும் சீர் வரிசைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ்,நகர துணைத் தலைவர் தேவராஜன்,நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top