Close
மார்ச் 7, 2026 8:01 மணி

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

வேலுசாமி, மாநில தலைவர், நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்.

நாமக்கல் :

தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தில் அரசு அமைக்க வேண்டும் என்ற என்னத்தில், தற்போதே பல்வேறு அரசியில் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து, கள் இறக்குவதற்கு, தமிழ்நாடு அரசு ஏற்கனவே விதித்துள்ள தடையை நீக்கி, முதல் கையெழுத்து போடுவோம் என்ற வாக்குறுதியை, எந்த அரசியல் கட்சியினர் கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு மட்டுமே தமிழக விவசாயிகள் வாக்களிப்பார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top