Close
மார்ச் 7, 2026 4:41 மணி

வளையப்பட்டி, கா.நா.பட்டி பகுதிகளில் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு..!

கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 15ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல், மாலை 5 மணிவரை மின்சார சப்ளை நிறுத்தப்படும். இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் அரூர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வியோகம் இருக்காது.
காளப்பநாய்க்கன்பட்டி: காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 15ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சப்ளை நிறுத்தப்படும். இதனால் காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top