Close
ஏப்ரல் 24, 2026 3:57 காலை

இறகுப்பந்து போட்டியில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை..!

நாமக்கல்:

இறகுப்பந்து போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

நாமக்கல் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி, நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்கள். 17 வயது உட்பட்டோர் பிரிவில் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் குருதர்ஷன், ஜெய் ஹரீஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் ஷாருக்கேஷ், ரனேஷ்வர் ஆகியோர் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top