Close
மார்ச் 7, 2026 6:03 மணி

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய ஆண்டு பேரவைக் கூட்டம்..!

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் 2025-2028 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது

சென்னை:

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் 2025-2028 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநிலத் துணைத் தலைவர் பா.ஆலிஸ் ஷீலா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது .

இதில், மாவட்டத் தலைவர் எ.வி.ஜி.சேகர், மாவட்டச் செயலர் ஜி. ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் இ. கார்த்திக் மற்றும் துணைத் தலைவர், துணைச் செயலாளர், அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி, இளைஞரணி, தணிக்கையாளர், பிரசார அணி, தொழில் நுட்ப அணி, இலக்கிய அணி. ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, மாநில தலைவர் ஆ. துரைப்பாண்டி, மாநில பொருளாளர் பத்மினிமில்லர், மாநிலத் துணைத் தலைவர் வே.மகேந்திர குமார், மாரிமுத்து.மற்றும் மாவட்ட,வட்டக்கிளை, மேனாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top