Close
மார்ச் 7, 2026 6:03 மணி

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி : முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு..!

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் உதயகுமார்

சோழவந்தான்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் திருவாலவாய நல்லூரில், அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார் .

இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு .கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம் , முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மகளிர் அணி லட்சுமி விருகை தர்மர்,விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்.பி. குமார், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டத் தலைவர் மதுசூதனன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன், புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன், மகளிர் அணி சாந்தி, மாரிமுத்து, மகமாயி, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் கல்லணை மனோகரன்,

குரு பார்த்திபன், கச்சை கட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆலயமணி, மூர்த்தி, சந்திர போஸ், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி , மலைச்சாமி, கோவில்பட்டி வழக்கறிஞர் அழகர்சாமி, வாடிப்பட்டி செந்தூர பாண்டியன், சித்தாலங்குடி ஜெயக்குமார், டி.வி. நல்லூர் சசிகுமார், மாலிக் ,துரைப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top