தொழில் நகரமாக விளங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வயது உடைய பெண்கள் 40 சதவீதத்தில் மேல் குடும்ப சூழ்நிலை கருதி பணிபுரிந்து வருகின்றனர்.
காலையில் பணிகளுக்கு செல்லும் முன் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளில் மேற்கொண்டு விட்டு குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் விட்டு செல்கின்றனர்.
இதனை சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் குறிப்பாக மது அருந்தும் பழக்கமுடைய நபர்கள் அருகில் உள்ள குடும்பத்தினுருடன் பழகும் நிலையில் குழந்தைகள் அவர்களுடன் சகஜ நிலையில் பழகி நிலை உள்ளது.
தற்போதைய குழந்தைகள் முதல் வளர் இளம் பருவ பெண் குழந்தைகள் செல்போன் மோகத்தினை பயன்படுத்தி அவர்களை அழைத்து சென்று பாலியல் சீண்டல்கள் செய்வது அதிகரித்து வருகிறது.
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் மற்றும் சுங்குவார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகள் இளைஞர்களால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவங்கள் வேலைக்கு செல்லும் பெண் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வு அளித்தாலும் இச்செயல் அதிகரித்து வருகிறது என இது போன்ற வழக்குகள் தெரிவிக்கிறது




