Close
செப்டம்பர் 20, 2024 12:24 மணி

புதுகை நகராட்சி 27 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 27 வது வார்டில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் லேட்பாளர் இப்ராஹிம்பாபு

புதுக்கோட்டை நகராட்சிக்கு   27 -ஆவது வார்டில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக  போட்டியிடும் ஏ.எம்எஸ். இப்ராஹிம்பாபு – தனது  ஆதரவாளர்களுடன் அவரது வார்டில்   கை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 3,100 வாக்காளர்கள் உள்ளனர்.

காங்கிரஸ்  நகரத்தலைவராக உள்ள இப்ராஹிம் பாபு  ஏற்கெனவே  2 முறை புதுகை நகர்மன்ற உறுப்பினராக வகித்தவர். மூன்றாவது முறையாக தற்போது களம் காண்கிறார்.

இவர் தனது வார்டுக்குள்பட்ட கீழ 2, 3 வீதிகள், சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து, ராணிஸ்கூல் சந்து, பெருமாள்கோவில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 வீதிகள் மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

மாவட்ட காங்கிரஸ் செயலர் எம்ஏகே.சேட், நிர்வாகிகள் Mாஜகான் முஸ்தபா, ஏ. பழனிவேலு, சுபஷான், சி.வடிவேல், அப்துல்ல, மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top