Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகித்த எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா. உடன் டிஎஸ்பி லில்லிகிரேஸ்

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாட்டு நலப்பணித் திட்டம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்துசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை  நீதிமன்ற  வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, காவல் துணை கண்காணிப்பாளர்  டி.கே.லில்லி கிரேஸ், நகர் மன்ற உறுப்பினர் ராஜாமுகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.

இதையடுத்து,  நகர துணை காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸி, தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில்  மாணவர்களிடையே உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சி .பிரசாத், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, மூத்த வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், சி.மதியழகன், எம்.அப்துல்லா, வி.ராஜேந்திரன், ஏ.ராஜு, ஜி.நந்தகுமார், வி.பழனிகுமார், ஜி.சந்திரசேகரன், வி.கலைமணி, எம்.கிட்டப்பா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். முன்னதாக சங்க துணை தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம் பாபு வரவேற்றார். நிறைவாக செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர் மன்றத்தில் நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top