Close
செப்டம்பர் 20, 2024 6:48 காலை

புதுக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸாருக்கு திருச்சி டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை

புதுகை நகர் காவல் நிலைய போலீஸாரை பாராட்டி சான்றளித்த திருச்சி மண்டல டிஐஜி வி. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை நகர காவல் எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும்  சாலையில் மன நலம் பதிக்கப்பட்டு சுற்றி திரிந்த பெண்ணை மீட்டு, அப்பெண்ணின் பாதுகாப்பு கருதி புதுக்கோட்டை நகர காவல்  நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால், காவலர்கள் முத்துலட்சுமி, ஹேமா மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர்  புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் உள்ள மனநல பாதுகாப்பு விடுதி மருத்துவ அலுவலர் கார்த்திக்தெய்வநாயகத்திடம்  ஒப்படைத்தனர்.

மேற்கண்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் செயலை பாராட்டு விதமாக திருச்சி மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி கொடுத்து பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top