Close
செப்டம்பர் 20, 2024 6:27 காலை

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் நெறிமுறைகள்: ஆய்வுக்குழு உறுப்பினருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்குழு உறுப்பினர் மிட்டல் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் கவிதாராமு, எஸ்பி. நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   மற்றும் அலுவலர்களுடன் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறித்து (13.05.2022) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில்,  வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படை யில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top