Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

மாணவிக்கு செவித்திறன் கருவி: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை

சிறுமிக்கு செவித்திறன் கருவியை வழங்கிய ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டையில் செவித்திறன் குறைபாடுடைய மாணவிக்கு காக்கிளியர் செவித்திறன் கருவி (Cochlear Implant Device)  வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆல் தி சில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சபிராபானு  என்ற செவித்திறன் குறைபாடுடைய மாணவிக்கு பொருத்தப்பட்டு பழுதடைந்த இருந்த Cochlear Implant Device  -க்கு பதிலாக ரூ.56,000- மதிப்பில் புதிதாக உதிரிபாகங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார்.

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படும் மனநலம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடுடை யோருக்கான நான்கு இல்லங்களில் தங்க வைக்கப்;பட்டுள்ள 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 – மதிப்பிலான போர்வைகள் என மொத்தம் ரூ.1,31,000 – மதிப்பிலான உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் ஆல் திசில்ரன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. இரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top