Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

டேக்வாண்டோ, குத்துச் சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் வெங்கடேஸ்வரா பள்ளி சாதனை

புதுக்கோட்டை

டோக்வாண்டோ, குத்துச்சண்டை போட்டிகளில் மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்ற திருகோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

டேக்வாண்டோமற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகமாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இபோட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 600 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தபோட்டியில், திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 13 மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளனர்.

இதையொட்டி  பள்ளி வளாகத்தில் மாநிலப்போட்டிக்கு தேர்வான மற்றும் மாவட்டபோட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு 19.10.2022 புதன்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.

டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற பிரித்திவிராஜ் முதல்பரிசு விக்னேஷ் மற்றும் முகேஷ்குமார் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை பெற்றனர். குத்துச் சண்டைபோட்டிகளில் கார்த்திகேயன் முதல் பரிசையும்,  ஹரிகரன், ஆதிஷ் ,தருண், குருநாத் ஆகிய மாணவர்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

விழாவில் பள்ளியின் தாளாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி மாணவர்களை பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கி, மென்மேலும்பலவெற்றிகளைப் பெறவாழ்த்துகள் கூறினார்.

வெற்றிப் பெற்றமாணவர்களை துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன்மற்றும்,  டேக்வாண்டோ  மற்றும் குத்துச்சண்டைபயிற்சியாளர் மாஸ்டர் சேது.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top