Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

மே 31 ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மே 31 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் (மே 2023) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (31.05.2023) வரும் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்,  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைக ளை மட்டும் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும்; முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top