Close
செப்டம்பர் 20, 2024 1:43 காலை

புதுக்கோட்டையில் பிறந்து ஞானபீட விருது பெற்ற அகிலன் நூற்றாண்டு விழா: வாசகர் பேரவை சார்பில் சிறுகதை போட்டி

புதுக்கோட்டை

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலன்

புதுக்கோட்டை மண்ணில் பிறந்து, ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன்  “நூற்றாண்டு விழாவை” புதுக்கோட்டை வாசகர் பேரவை சிறப்பாக கொண்டாடவிருக்கிறது.

புதுக்கோட்டை

இதனை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த  பள்ளி(+1, +2) மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சிறுகதைப் போட்டி நடத்துகிறது. சிறுகதை 5 பக்கங்களுக்கு (A 4 காகிதத்தில்) மிகாமல் இருக்க வேண்டும். இன்றை சமூகப் பிரச்னைகளை அடிப்படையாக கதையின் கரு இருக்க வேண்டும். முதல்பரிசு ரூ.1000, சான்றிதழ் மற்றும் அகிலன் எழுதிய புத்தகம், இரண்டாம் பரிசு ரூ 750,மூன்றாம் பரிசு ரூ 500. போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் உரிய அடையாள சான்றிதழ் பெற்று இணைத்து அனுப்பவேண்டும். சிறுகதை வந்துசேர வேண்டிய கடைசி நாள் 05.07.2022. என்று வாசகர் பேரவைத் தலைவர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சா.விஸ்வநாதன், செயலர், வாசகர் பேரவை,  32, S.S.நகர் புதுக்கோட்டை- 622001. கைபேசி: 9443639397.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top