Close
மே 11, 2024 5:35 மணி

புதுகை ஒன்  மார்கழி மகா உற்சவம்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மார்கழி ஒன் உற்சவம்

புதுக்கோட்டையில் புதுகை ஒன்  மார்கழி 15 ஆம் ஆண்டு மார்கழி மகா உற்சவம் நடைபெற்றது.                                                                                                                                                                                        புதுக்கோட்டையில் புதுகை ஒன் மார்கழி  15 ஆம் ஆண்டு மகா உற்சவம்  வடக்கு ராஜவீதி மீனாட்சி திருமண மஹாலில் மிருதங்கம்  கே. ராஜா  நினைவு அரங்கில் நடைபெற்றது.

தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். அருட் பணி    மருத்துவர் டி. எஸ். ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நாதஸ்வர மங்கள இசையுடன்  விழா தொடங்கியது. பின்னர் ஸ்ரீ சாய் நாட்டியாலயா மாணவிகளுடைய பரதநாட்டியம், ஸ்ரீ லலிதா சங்கீதா வித்யசாலை மாணவர்களுடைய இன்னிசை நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

புதுக்கோட்டை
மார்கழி ஒன் உற்சவத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி

இந்நிகழ்வில் புதுக்கோட்டை இன்டேன் கேஸ் நிறுவன முகவர் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் இன்னிசை கலா ரசிகர்கள்  கலந்து கொண்டனர்.

கண்ணை கவரும் மாணவர்களுடைய நிகழ்ச்சிகள்  சிறப்பாக நடைபெற்றது.  மார்கழி பிறப்பு அன்றே இந்நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் அனுராதா சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top