நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் இருப்பதையும், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஐஜேகே, கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் முத்துராஜா தலைமை வகித்தார். நாமக்கல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி செயலாளர்கள் சந்தோஷ், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விட வேண்டும். மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, சட்டசபை தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்




