Close
ஜூலை 22, 2026 11:53 மணி

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்

நாமக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுபாலன் வழங்கினார். அருகில் மேயர் கலாநிதி, கமிஷனர் செல்வபாலாஜி ஆகியோர்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, ஒரே இடத்தில் அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் பெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம், தாட்கோ, ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளி கல்வி துறை, திறன் மேம்பாட்டு துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அடையாள அட்டை, ரேஷன் கார்டு திருத்தம், நல வாரிய அட்டை வழங்குதல், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டது.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில், மாநகராட்சி மேயர் கலாநிதி, ஆணையர் செல்வபாலாஜி, மாநகர நல அலுவலர் கஸ்தூரி பாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top