Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

கவிதைப்பக்கம்….சுகங்கள்… டாக்டர் மு.பெரியசாமி

புதுக்கோட்டை

கவிதைப்பக்கம்.. டாக்டர் மு. பெரியசாமி

சுகங்கள்…

நீ
நடை பழக…
நான்
மண்டியிட்டுருக்கிறேன்.

நீ
படிக்கவேண்டி
நான்
கடன் பட்டிருக்கிறேன்.

நீ
நெஞ்சில்
உதைக்கும் போதெல்லாம்
நான்
உன் கால்களை
முத்தமிட்டிருக்கிறேன்.

உனக்கு
வலியென்றால்
நான்
துடி,துடித்திருக்கிறேன்.

உனக்கு
காய்ச்சல் என்றால்
நான்
கூச்சலிட்டு அழுதிருக்கிறேன்.

உன் கண்ணில்
தூசி என்றால்
நான்
காற்றை ஊற்றி
கழுவியிருக்கிறேன்.

உனக்கு
பசி
அடங்கும் வரை
நான்
சாப்பிட மறுத்திருக்கிறேன்.

நீ
படித்த பள்ளியை
வணங்குவதை
நான்
வாடிக்கையாக கொண்டுள்ளேன்.

நீ
வானம் வரை
உயரும் வரை
உனக்கு
வழியாகவும்
ஒளியாகவும்
வாழ்ந்து கொண்டிருப்பேன்.

இவை
சுமைகள் அல்ல
அப்பாவின்
சுகங்கள்….

மருத்துவர்மு.பெரியசாமி,
புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top