Close
மே 11, 2024 8:12 காலை

திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்

புதுக்கோட்டை

திருவொற்றியூர் பாரதி பாசறை

திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவ.22 வரை  விண்ணப்பிக்கலாம்

சென்னை  திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 39-ஆம் ஆண்டு நேரு தேசியக் கலை விழாவினை யொட்டி மாணவர்களுக்கிடையேயான  இசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் வரும் தங்களது விண்ணப்பங்களை நவ. 22, புதன்கிழமைக்குள் அனுப்பி வைக்குமாறு பாரதி பாசறை சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறி்த்து திருவொற்றியூர் பாரதி பாசறை செயலாளர் முனைவர் மா.கி.இரமணன் வெளியிட்டுள்ள தகவல்:

வெள்ளி விழா கண்ட திருவொற்றியூர் பாரதி பாசறை ஆண்டுதோறும் நேரு தேசியக் கலை விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது.  இதேபோல் இந்த ஆண்டு விழா வரும் நவ.25- ம் தேதி சனிக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அவ்வை அருள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதனை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தப்பட உள்ளது.   முதல் 5  வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தலைப்பில் இசை (தலா 3 நிமிடம்),   6 முதல் 8 வகுப்பு வரை ‘ வீதிகளில் திரியும் விலங்குகளும், விபத்துகளும்’ என்ற தலைப்பில் ஓவியம் வரைதல் (60 நிமிடம்),  9, 10 வகுப்பு மாணவர்களுக்கு ‘அறிவியல் திறமையில் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (தலா 3 நிமிடம்), 11, 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘உலகில் ஓயுமா போர்களில் ஓலம்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகளும் (60 நிமிடம்) நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் நவ.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதுடன் அதிக பரிசுகளை பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.

போட்டிகள் அனைத்தும் திருவொற்றியூர் வடக்குமாடவீதியில் உள்ள டி.கே.பி.மகாலில் நவ.25-ம் சனிக்கிழமை 2 மணிக்கு நடைபெறும்.  வெற்றி பெறுபவர்களுக்கான பரிசளிப்பு விழா இதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: திருவொற்றியூர் பாரதி பாசறை, 39/13, சோமசுந்தரம் நகர் நான்காவது தெரு, திருவொற்றியூர், சென்னை-600019, மேலும் விபரங்களுக்கு 94441-82153, 94442-98396, 93810-41157 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top