Close
அக்டோபர் 5, 2024 7:07 மணி

திருவொற்றியூர் கடற்கரையில் இளைஞர் கொலை: 2 பேர் கைது

சென்னை

கொலை

சென்னை, திருவொற்றியூரில் ஜோதீஸ்வரன்(23) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சுனில் அபினேஷ் திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெரு அருகே உள்ள கடற்கரையில் திங்கட்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு  கிடந்ததை பார்த்த அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜோதீஸ்வரன் என்பதன் மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் ஜோதிஸ்வரனின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையையடுத்து இக்கொலையில் தொடர்புடைய திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் குப்பத்தைச் சேர்ந்த சுனில் (24), அபினேஷ்( 22 )ஆகிய  இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top