Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

அடகுக்கடையில் திருட்டு… போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நகைக்கடை அடகு கடை உட்பட நான்கு கடைகளில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை, மாவட்டம் அறந்தாங்கி பெரியகடைவீதி மங்களம் ஸ்டோர் சந்து பகுதியில், நகை கடைகள் மற்றும் நகை அடகு கடைகள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு கடை உரிமையாளர்கள் கடை களை பூட்டி சென்று விட்டு மறுநாள் காலையில் வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த போது, கடை கதவுகளின் பூட்டுகள் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில்,

ரத்னா நகைக்கடையில் வெள்ளி பொருட்களும், கண்ணன் நகை பட்டரையில் வெள்ளி நகைகளும்.எதிரே யுள்ள நகை அடகு கடையில் பூட்டை உடைத்து சில அடகு பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top