Close
மே 15, 2024 12:00 காலை

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை நகரில் கத்தியைக் காட்டி மிரட்டி  பணம், கைப்பேசி உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து முதன்மை சார்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர் சுகுமார் மகன் வசந்தகுமார். இவர் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள கேஎல்கேஎஸ் நகர் பிரிவு சாலையில் கடந்த 2021 டிசம்பர் 11ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காந்திநகரைச் சேர்ந்த சின்னையா மகன் விஜயகுமார் (47), வசந்தகுமாரை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. ஆயிரம் மற்றும் கைப்பேசியைப் பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வசந்தகுமார் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சி. சசிகுமார், வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top