Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

அறந்தாங்கி அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு சீருடை வழங்கிய திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம்சண்முகம்

அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அறந்தாங்கி உதயம் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் நிறுவனம் சார்பாக இலவச சீருடை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்ட மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ரேணுகாதேவி தலைமை வகித்தார். மாணவர்களுக்கான சீருடையை அறந்தாங்கி உதயம் சில்க்ஸ்- ரெடிமேட்ஸ் நிறுவனம் சார்பாக ஆடிட்டர் தங்கதுரை கலந்து கொண்டு, 300 மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சீருடைகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சி அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க தலைவர் புவனா செந்தில்குமார் லரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரமேஷ் செந்தில்குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top