Close
ஏப்ரல் 23, 2026 9:56 மணி

திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் தீபாவளி திருநாள் கொண்டாட்டம்

திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் தீபாவளி திருநாள் விழா மிகவும் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முதல்வர் திருமதி அமலி பிரசில்லா, கல்வித் தலைவர் திரு. பாபு மாதேஷ், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் தொடங்கி வைத்தனர்.

மாணவர்கள் பாரம்பரிய நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். சிறப்பு நிகழ்ச்சியாக வணிகத் திருவிழா ஏற்பாடு செய்து மாணவர்கள் தாங்களாகவே குழுக்களாக பிரிந்து ஸ்டால்கள் அமைத்து வியாபாரம் செய்தனர். மாணவர்கள் தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டனர்.

பள்ளி வளாகம் வண்ணமயமான விளக்குகள், தியாக்கள் மற்றும் கண்களைக் கவரும் ஸ்டால்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 120 ஸ்டால்களில் இளிப்பு வகை மற்றும் சிற்றுண்டி, உணவு வகைகள், விளையாட்டு ஸ்டால்களை அமைத்தனர்.

மேலும் இந்த விழாவில் கவர்ச்சிகரமான வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் அற்புதமான நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த விழா மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் அமலி பிரசில்லா அவர்களும் பள்ளியின் கல்வித் துறைத்தலைவர் பாபு மாதேஷ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top