Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

புஷ்கரம் வேளாண் கல்லூரியில் தேசிய பாதுகாப்பு வாரவிழா

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சார்பில் தேசிய பாதுகாப்பு வாரவிழா

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சார்பில் தேசிய பாதுகாப்பு வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆபத்தில்லா வாழ்க்கைப் பயணம், பணியிடங்களிலும் பயணங்களின் போதும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு வார விழாவினை கல்லூரியின் செயலாளர் எம்.ராஜாராம், துணை முதல்வர் வி.சாந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவையொட்டி மாணவர்கள் நடைபயணமாகச் சென்று வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தா.ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top