Close
ஜூன் 8, 2026 10:46 காலை

புதுகை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை

புதுகை புஷ்கரம் வேளாண்கல்லூரியில் டிஎஸ்பி ராகவி முன்னிலையில் நடந்த உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை உலக மகளிர்தின விழா  நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் எம்.ராஜாராம் தலைமை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர்தின விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

முன்னதாக துணைமுதல்வர் வி.சாந்தி வரவேற்றார். ஆர்.சண்முகப்பிரியா நன்றி கூறினார். விழாவில் இதையொட்டி, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், தனிதிறன் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top