Close
செப்டம்பர் 19, 2024 6:56 மணி

புகழ்ச்சிக்கு மயங்கவோ… இகழ்ச்சிக்கு பதறவோ… கூடாது: ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றபெண் குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா.

புகழ்ச்சிக்கு மயங்கவோ இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது  என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா.

மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா புத்தாஸ் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்கவிழா பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

விழாவில்,  மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பெண்  குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.

அவர் பேசும்போது, பொதுவாக பெண்கள் தங்களை யாராவது பாதுகாக்கவேண்டும் என எதிர்பார்க்காமல் நமக்கு நாமே பாதுகாப்பு என்கின்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களோ ஆண்களை பெண்களோ அணுகும்போது அவர்கள் முகமலர்ச்சியோடு விருப்பத்தை ஒத்துக்கொள்ளவில்லை யென்றாலே அவர்கள் “நோ”சொல்வ தாகவே அர்த்தம். எந்த சூழ்நிலை என்றாலும் அதை தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை
விழாவில் துண்டு பிரசுரங்களை வெளியிட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

மேலும் நம் முகத்துக்கு நேராக ஒருவர் புகழ்வதையும் மற்றொருவர் இகழ்வதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். புகழ்ச்சிக்கு மயங்கவோ  இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. அப்படியிருந்தால் தான் குழந்தைகள் தங்கள் இலட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த முடியும்.

இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகள் மட்டுமல்ல தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் தங்களுக்கு சிரமம் என்று உணர்கின்ற போது தொடர் கொள்ள வேண்டிய எண்.
1098. இதைத் தொடர்பு கொண்டால், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திலிருந்து உடனே வந்து  உங்களுக்கு உதவுவார்கள்.

ஆகவே பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி உதவும் கரங்களோடு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

புதுக்கோட்டை
பள்ளி மாணவர்களின் தற்காப்புக்கலை பயிற்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ஜெயராஜ் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ஜோயல் பிரபாகர், மாவட்ட
குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம்.

மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ். ஜெயகுமார், மாவட்ட அம்மெச்சூர் தேக்வாண்டா தலைவர் டாக்டர் சலீம்,  அறிவியல் இயக்க தலைவர் வீரமுத்து,  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம், பள்ளியின் துணைமுதல்வர்குமாரவேல் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக புத்தாஸ் வீரக்கலைகள் கழகத் தலைவர் சேது கார்த்திகேயன் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழகஉடற் கல்வி இயக்குநர் கே.ஏ. ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர் கணியன் செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top