Close
மே 18, 2024 11:00 காலை

பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி கேட்டு செம்பாட்டூரில் சாலை மறியல்

புதுக்கோட்டை

செம்பாட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர்

புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சி.ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலளார் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் உரையாற்றினார்.

போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த போராட்டத்தை அடுத்து புதுக்கோட்டை வட்டாட்சியர் எஸ்.விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா பரமசிவம் உள்ளிட்டோர் சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு விரைவாக பகுதிநேர அங்காடி திறப்பது, வரும் திங்கள் கிழமை முதல் செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு காலையும், மாலையும் அரசு நகரப் பேருந்து இயக்குவது,

செம்பாட்டூர் சிவன்கோவில் அருகில் உள்ள பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது, குடிநீர்த் தேவைக்காக புதிய ஆழ்துளைக்கிணறு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடரந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top