ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஏ.இ.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் மோகன ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனக் காரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, அம்மணியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் பிருத்திவியா, பொருளாளர் தீபா, செயற்குழு உறுப்பினர் ஜெ.ஹரிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார்.நிர்வாக அலுவலர் என்.குமார் நன்றி கூறினார்.
கோகுலாஷ்டமி தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலக்கலாக வலம் வந்தனர். எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்தும், மூன்றாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் விதவிதமான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து அசத்தினர்.
மேலும் பள்ளி மாணவர்களின் நடன நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மாணவர்கள் பங்கேற்ற கிருஷ்ண அவதாரம் மற்றும் மகாபாரத நாடகமும் அரங்கேற்றப்பட்டது.விழாவையொட்டி பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.