Close
ஜூலை 7, 2024 9:59 காலை

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் மாவட்டத்தில் முதலிடம்

புதுக்கோட்டை

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை வாழ்த்திய பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி

தமிழ்வளர்ச்சித் துறை பேச்சுப்போட்டியில்மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை.

பள்ளி,கல்லூரி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக் கும் பொருட்டு தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகளை நடத்திவருகின்றது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்தியது. அதில் மாவட்டம் முழுவ திலிருந்தும் 200 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவி ச. ஸ்ரீஹாசினி பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி
ஸ்ரீ ஹாசினிக்கு பரிசுத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா  வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் முதல்பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி சா.ஸ்ரீஹாசினிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பேச்சுப் போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், தமிழாசிரியை சுமதி உள்ளிட்ட
ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top