Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா 31.07.2024. அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் பள்ளி மாணவர் தேர்தலை நடத்தியது, அங்கு மாணவர்களுக்கு பரிந்துரைத்தல், பிரச்சாரம் செய்தல் மற்றும் மற்ற மாணவர்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி விளக்குதல் போன்ற கற்றல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேர்தல் நாளில், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு டிஜிட்டல் வாக்களிப்பு செய்தனர். காலை தேர்தல் முடிவுகளை பள்ளி முதல்வர் மற்றும் முதல்வர் அறிவித்தார்.

இதனையடுத்து மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாரண சாரணியர் இயக்க செயலாளர் திருமதி.பியூலா கரோலின் அவர்கள், மாணவர் தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஒரு நல்ல மற்றும் சிறந்த தலைவராக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நல்வழிகளைக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இவ்விழாவில் மாணவத் தலைவர், மாணவத் துணைத்தலைவர், பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் விளையாட்டுத்துறை தலைவர்கள், குழுத் தலைவர்கள், குழுத் துணைத்தலைவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.


இவ்விழாவில்  தலைமைத்துவ வளர்ச்சி பற்றியும், மனவலிமை, உடல் வலிமை, நேர்மை பற்றியும், வகுப்புக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க வழிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் செயல் முறைகளைப் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் முதல்வர் அமலி பிரசில்லா மாணவர் தலைவர்களை வாழ்த்தி , “ஒரு சமூகத்தில் ஒரு தலைவரின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றி அவர்களை ஊக்கப்படுத்தினார். ,கல்வித்துறை தலைவர் பாபு மாதேஷ் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலிலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top