Close
செப்டம்பர் 13, 2024 1:11 காலை

சிவகங்கை  பிஎம் ஶ்ரீ  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா

சிவகங்கை

சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சி

சிவகங்கை, ஆக. 23: சிவகங்கையிலுள்ள பிஎம் ஶ்ரீ  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பதினெட்டாம் ஆண்டு விழா   கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு  மாவட்ட‌ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்து பேசுகையில்,  மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குமாறு அறிவுறுத்தினார்.

சிவகங்கை
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவை தொடக்கி வைத்த ஆட்சியர் ஆஷாஅஜித்.

முன்னதாக மாலை 5 மணிக்கு சரஸ்வதி வாழ்த்துடன் தொடங்கிய  ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இரவு 9 மணிவரை  நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் சென்ற ஆண்டில் 100% தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் முதல்வர் மனோஜ்குமார்ஷர்மா வரவேற்றார். நிறைவாக பள்ளியின் கணித ஆசிரியர்  செல்வம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top