புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டது. மழலையர்கள் சிறுவர்கள் சிறுமிகள் மாணவர், மாணவிகள் புதிதாக சேர்ந்த மழலையர்கள் மாணவ மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன், தலைமைஆசிரியர், ஆசிரியைகள் நெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.
புதிதாக சேர்ந்த மழலையர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து எழுது பொருட்கள், இனிப்புகள் வழங்கி இன்முகத்துடன் வரவேற்றனர். குழந்தைகள் தங்களது வகுப்பறைக்கு ஆர்வமுடன் கல்வி கற்க சென்றனர்.