Close
மே 13, 2024 8:27 மணி

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை

பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சியில் மாணவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா சான்றிதழ்களை வழங்கினார்.

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சியில் மாணவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா சான்றிதழ்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் , பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் நிறுவனம் இணைந்து நடத்திய புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமை வகித்து,பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மிக சிறப்பாக நடத்தப்பட்டு  வருகிறது.

மாணவர்களின் சிந்தனையில் உதித்த புதிய கருத்துகளை அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாற்றி அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் மகத்தான திட்டம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமாகும்.

இத்திட்டத்தில் நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 125 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 136 ஆசிரியர்கள் 3101 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்

இத்திட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வழிகாட்டி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பாடங்களை முடித்தல் புதுமை யோசனை களை சமர்ப்பித்தல் ஆகிய நிலைகளில் 100 % நம் மாவட்டம் முடித்து அதிலிருந்து சிறந்த ஏழு அணிகள் தேர்வு செய்யப் பட்டு பள்ளிகளின் மாணவர் குழுக்கள் தங்களது படைப்பு களை முன்மாதிரியாக உருவாக்க மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட ஏழு அணிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கி றேன். நீங்கள் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றால் ரூ.25,000  முதல் பரிசு கிடைக்கும். முதல்பரிசு  வென்ற மாணவர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றால் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

எனவே இங்கு பங்கேற்றுள்ள மாணவர்கள் தங்களது படைப்புகளின் வாயிலாக போட்டிகளில் வெல்ல என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தை நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்திக் கொண்டு வரும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளருக்கும், ஈ.டி 2 கள ஒருங்கிணைப் பாளருக்கும் (பொ) பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்றார் அவர்.

முன்னதாக மாவட்ட சுற்றுச் சுற்றுச்சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி. சாலை செந்தில் வரவேற்றார்.  இந்த நிகழ்ச்சியில் மெளண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் (நிர்வாகம்) எஸ். கிருபா ஜெபராஜ்  உள்பட  பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.  நிறைவாக மாவட்ட ஈ.டி2 ஒருங்கிணைப்பாளர்(பொ) அருமைரூபன்ஜோசப் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top