Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

கவிதைப்பக்கம்… அணிகலன்கள்… மு.பெரியசாமி..

கவிதை

கவிதை... அணிகலன்கள்... மரு. பெரியசாமி

அணிகலன்கள்…

நம்
அன்பு ஒன்றே
அண்டத்தை
இயங்க வைக்கும்
ஆற்றல்……
அதனால்
ஆக்கவும் முடியும்
நம்மை
காக்கவும் முடியும்!!

நம் செய்வினை
நம்மை
செதுக்கி செம்மையாக்குகிறது….
எண்ணங்களே
வாழ்க்கையின்
எதிர்காலத்தை தொடும்
ஏணியாகிறது!

நம் உணவு
உடல் நிலையை
சீராக்கி
உறுதிப்படுத்துகிறது,
உழைப்பு
நம் உயர்வை
உருவாக்கி காட்டுகிறது!

நம் கல்வி
பிறவியை தாண்டியும்
பெரும் பயனைத்தருகிறது,
உண்மை
நன்மைகளை
உருவாக்கும்
உணர்வுகளாகிறது!

நம் அறிவு
அழிவைத்தடுக்கும்
ஆயுதமாகிறது,
செய்யும் அறம்
புண்ணியத்தையும்
புகழையும் தரும்
எந்திரமாகிறது

நாம்
காலத்திற்கேற்ப
காரியத்தை செய்தால்
கடலையும்
கடுகு ஆக்கலாம்,
நம் மெய்யை உணர்ந்து
பொய்யை துறந்தால்
மேன்மக்கள் ஆகலாம்!

இவையாவும்
நம்
அணிகலன்கள்
இருந்தால்
ஆபத்தை தடுக்கும்,
அழகான
வாழ்க்கையை கொடுக்கும்!!

ஆக்கம்: மருத்துவர் மு. பெரியசாமி-புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top