Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

புதுகை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை

வல்லத்திராகோட்டையில் புவனேஸ்வரி தங்கமாளிகை சார்பில் நடைபெற்ற இலவச கண்பரிசோதனை முகாமை தொடக்கி வைத்த புவனேஸ்வரி நடராஜன்

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வல்லத்திராக்கோட்டை இராமசாமி-தெய்வானை அம்மாள் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில்  தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்ற முகாமை புவனேஸ்வரி தங்கமாளிகை உரிமையாளர் எஸ். நடராஜன் தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை

கண்மருத்துவர்கள் காவ்யா, சினேகா தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் 173 பேருக்கு கண் அழுத்தம், கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை உள்பட பல்வேறு வகை யான கண் நோய்கள் குறித்து பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை  தெரிவித்தனர்.

பரிசோதனை செய்யது கொண்டவர்களில் 60 பேர் கண் அறுவைச்சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதில். புதுக்கோட்டை  செஞ்சுரி லயன்ஸ் மற்றும் மகாராணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  முகாமை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் பி, விவேகானந்தன், புவனேஸ்வரி தங்கமாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் மயில்வாகனம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top