Close
அக்டோபர் 5, 2024 7:43 மணி

அரசு மருத்துவக்கல்லூரியில் சுற்றுப்புறத்தூய்மை விழிப்புணர்வு

புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது .

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது   அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ராஜ் மோகன் தலைமை வகித்தார்.

சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை முதன்மை குடிமை மருத்துவர் கே.சரவணன் அனைவரையும் வரவேற்றார்.  கல்லூரி முதல்வர் மருத்துவர் ராஜ் மோகன் சுற்று சூழல்,மருத்துவமனையில் சுற்றுப்புற தூய்மை குறித்தும்; அதன் மாசுபாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஏற்படும் நோய்கள் குறித்தும்  விழிப்புணர்வு பற்றி பேசினார்.

புதுக்கோட்டை
மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்

கல்லூரியில் பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள் சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை முதன்மை குடிமை மருத்துவர் கே.சரவணன் முன்னிலையில் சுற்று சூழல் காப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்தனர்.

பின்னர் பேராசியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்புடன் சுற்று சூழல் விழிப்புணர்வு   ஊர்வலர் நடைபெற்றது.   நிறைவாக,  மருத்துவ கல்லூரி     பேருந்து நிறுத்தத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் தலைமையில் மரகன்றுகள் நடப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top